சிவனே போற்றி

சிவனே போற்றி

கூடிய நரையும் குன்றிய தேகமும்

உடைந்த பற்களும் வளைந்த முதுகும்

யார் என கேட்கும்  முன்

ஊர் உதவி நாடும் முன்

காலம் உருவத்தை கரைக்கும் முன்

நாடிடு தேடிடு வழிபடு சிவனை

One response to “சிவனே போற்றி”

  1. merags Avatar
    merags

    கவி காளமேகம் பாடிய பாடல் ,

    முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
    அக்கால ரைக்கால்கண் டஞ்சாமுன் – விக்கி
    இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
    ஒரு மாவின் கீழரையின் றோது.

    திருக்குற்றால ஆலயச் சுவரில் எழுதப்பட்ட பட்டினத்தார் பாடல்.

    “காலன் வரும்முன்னே கண்பஞ் சடைமுன்னே
    பாலுன் கடைவாய்ப் படுமுன்னே – மேல்விழுந்து
    உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
    குற்றாலத் தானை நினை“

    அதே பொருள் கொண்ட பாடல்கள் .

    Source: http://oomaikkanavugal.blogspot.com/2014/09/blog-post_26.html#at_pco=smlwn-1.0&at_si=59627a5a23550072&at_ab=per-2&at_pos=0&at_tot=1

Leave a comment

Why are you reporting this comment?

Report type