ஒன்றாக நன்றாக
Posted on July 9, 2017 Leave a Comment
பஞ்சபூதங்களும் ஒன்றாக
சந்திரசூரியரும் உனதாக
ஓ நந்திவாசனே
உலகங்கள் நிரப்பிய உன்னைக் கண்டேன்
மலைத்தேன்
இனி யாரை காயப்படுத்துவேன்
ஏன் ராமநாதா
அவன் வழிதனில்
Posted on July 4, 2017 Leave a Comment
தேனீயின் வழிதனில் வாசனை மலர்கள் ஓட கண்டேன்
என்ன ஒரு அதிசயம்
இதயத்தின் வழிதனில் புத்தி ஓட கண்டேன்
கடவுளின் வழிதனில் ஆலயம் ஓட கண்டேன்
The Men
Posted on July 4, 2017 Leave a Comment
ஒருமுறை என்னிடம் காண்பிப்பாயா
அந்த மனிதனை
கண்களின் வீரத்தை அறுத்தெறிந்தவன்
இதயத்தின் சாரத்தை வறுத்தெறிந்தவன்
மற்றும் உலகின் ஆரம்பத்தை கற்றறிந்தவன்
என் குகை ஈசனே
Symbol
Posted on July 4, 2017 Leave a Comment
ஓடும் நதி அனைத்தும் கால்களே
எரியும் நெருப்பு அனைத்தும் வாய்களே
வீசும் காற்று அனைத்தும் கைகளே
ஆம் குகை ஈசனே
உன் மக்களுக்கு
அங்கம் எல்லாம் லிங்கமே
அருவான பரம்பொருளையே ‘சிவம்’ எனும் சொல் குறிக்கின்றது. சம்ஸ்கிருத மொழியில் ‘லிங்கம்’ என்பதன் பொருள் ‘அடையாளம்’ என்பதாகும். எனவே ‘சிவலிங்கம்’ என்பது அருவுருவாய் பரம்பொருளைக் காட்டுவது. அருவான பரம்பொருள் உண்மையை, படிப்படியாக உணருவதற்கான பாதையே.
Temple of Body
Posted on July 4, 2017 Leave a Comment
முழு ஆலயமும்
இவ்வுடலில் இருக்க
மற்றொன்றின் தேவை
இங்கு எதற்க்கு
யாரும் கேட்கவில்லை
அவ்விரண்டை
குகை ஈசனே
நீ கல் என்றால்
நான் யார்?
மாயை மறைந்திட
Posted on July 4, 2017 Leave a Comment
உடல் மண்
உயிர் வான்
எதை நான் அடைவேன் கோமானே,
எதற்க்கு, எப்படி
உன்னை நினைக்கவே
என் மாயையை நீக்கிடு
வெண்மல்லிகை கோமானே
Run
Posted on July 4, 2017 Leave a Comment
குரங்காட்டியின் கோளில் குரங்கிருக்க
பொம்மலாட்ட கயிற்றின் அடியில் பொம்மை இருக்க
உன் விளையாட்டை நான் விளையாட
உன் வார்த்தையை நான் பேச
உன் விருப்பமாய் நானிருக்க
இவ்வுலகின் பொறியாளனே
வெண்மல்லிகை கோமானே
நான் ஓடிக்கொண்டிருந்தேன்
நீ நிறுத்தம் வரை.
எங்கே நீ
Posted on July 4, 2017 Leave a Comment
என்னை அறியாது நானிருக்க
நீ எங்கிருந்தாய்
பொன் தன் நிறத்தில் இருக்க
நீ என்னுள் இருந்தாய்
உன்னுள் கண்டேன்
வெண்மல்லிகை கோமானே
முரண்பாடாகிய உனை என்னுள்
அங்கம் ஏதும் இன்றி
என்னையிழந்தேன்
Posted on June 30, 2017 Leave a Comment
நாட்காலம் பகலில் உன்னால் வருந்திநின்றேன்
நாட்காலம் இரவில் உன்னால் பித்தனானேன்
அல்லும்பகலும் பிணியானேன் உன்னால் என்னை இழந்தேன்
கொண்டகாதல் கண்ட முதல் பசித்தாகம் தூக்கம் மறந்தேன்
இரு காதல்
Posted on June 30, 2017 Leave a Comment